Dedication - சமர்ப்பணம்

“If God had patented the air, we could not breathe.” Only by sharing love does one grow. -- Guruji Amritananda Devipuram

இந்த தளம் எனது ஸ்வ குருவான ஸ்ரீ அன்னபூர்ணாம்ப ஸஹித ஸ்ரீ அமிர்தானந்த நாதர் பாதகமலங்களுக்கு சமர்ப்பணம்!

This site is dedicated to lotus feet of my beloved, lovable Guruji Sri Annapoornambha Sahitha Amirthananda Nata

Disclaimer:
Purpose of this site is to share the ancient secret wisdom Sri Vindya into Tamil speaking seekers for the educational purpose.

Tuesday, December 16, 2014

பெண்மையின் புனிதம் - அன்பும் பயமும்

இது குருஜியின் Sacred Feminine என்ற கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கில மூலத்தினை இந்த இணைப்பில் காணலாம்: Devipuram


எமது அகவுலகத்தில் அன்பின் ஒளியை உருவாக்குவதன் மூலம் நாம் எம்மை தெய்வ சக்தி உடையவர்களாக்கி கொள்ளலாம். இது எமது கீழான உணர்ச்சிகளை உருமாற்றுவதற்கு இது ஒரு சிறந்த வழி. எமது வாழ்க்கையின் இருப்பில் இருக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மகிழும் மனநிலை எமக்கு வாழ்வினை அமிர்தமாக்கும். இந்த நன்றியுணர்வு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் மதிப்புடன் பார்க்கும் மன நிலையினை தரும். இது இந்த வாழ்வினை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும்.

நன்றியுணர்வும் மனதில் கருணையும் கூடிய தன்மையே குணமளிக்கும் மருந்தாகும். இதுவே ஒருவரை குணப்படுத்தும். அன்பும் கருணையுடனும் பகிர்ந்தளிக்கப்படும் நன்றியுணர்வு பல உயிர்களையும், உறவுகளையும் உருமாற்ற வல்லது! மனம் கருணையுடையதாய் இருக்கும் போது அன்பு, அழகு, தெய்வ சக்தி என்பவற்றை அனுபவிக்கும் ஆற்றலைப் பெற்று எமது உணர்வின் அடி ஆழத்திற்கு ஒன்றிச் செல்லும் வல்லமையினை பெறுகிறது. எமது உண்மையான ஸ்வருபத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டுமாயின் நாம் எல்லா உயிர்களையும் மதிப்பதற்கும், நன்மை செய்வதற்கும் உரிய பண்பினை பெற்று எமது இதய கமலங்களை தெய்வீக அமிர்தம் பாய்ந்து ஒடுவதற்குரியதாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

அன்பின் ஒளியை எமது அகத்தில் சூக்ஷ்ம தேகத்தில் உருவாக்குவது உண்மையான தெய்வீக உருமாற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த அகவிழிப்புணர்வு எமது உண்மை அமைதி ஸ்வரூபத்தினை அறிய தடையாக எம்முள் காணப்படும் அகமுரண்பாடு மற்றும் நாம் நம்பும் ஒன்றையே உண்மை என்று எண்ணும் இறுக்க தன்மை போன்றவற்றை நீக்கி எம்மில் இருந்து மனஅழுத்தங்கள், வெறுப்புணர்வு, மற்றவரை குற்றம் சாட்டும் தன்மை என்பவற்றிலிருந்து விடுவிக்கும். எமது உண்மை ஸ்வரூபம் எனும் அன்பினை உணர்ந்து, எமது பொறுப்புகளை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு செயற்படும் போது உலக ஆசைகள் எனும் இருளில் இருந்து நிரந்தர ஆனந்தம் எனும் ஒளி நிலையினை அடைகிறோம்.

நாம் தெய்வீக அன்பினையும் ஆனந்தத்தினையும் அனுபவிக்க ஆரம்பிக்கும் போது நாம் ஸோம எனும் அமிர்தத்தினை பருக ஆரம்பிக்கின்றோம். ஒரு தடவை இந்த அமிர்த ஆனந்தத்தினை அகத்தில் அனுபவித்து பருகிவிட்டால் எமது உணர்வின் ஆழமாகிய சுயத்தினை தொட்டுவிடுவோம். இந்த உயர் உணர்வு நிலை எமது எண்ணங்கள், செயல்களூடாக வடிகட்டி வரும்போது எமது ஒவ்வொரு செய்கையிலும், பிரபஞ்சத்தின், மனிதருடனான உறவிலும் தெய்வீக அன்பு பாயத்தொடங்கும்.

என்னுடைய ஆன்ம பயணத்தின் புனித தருணங்கள் என்னை தெய்வீக தாயுடன் இணைத்தது, அவளின் அருள் எல்லாவித துன்பங்களிலிருந்தும் மீட்டு வெளிக்கொணரும் சக்தி வாய்ந்தது. அவளுடைய ஒவ்வொரு பார்வையும் எல்லாவித தீமைகள் குழப்பங்களையும் கரைத்து இறுதியாக பயன்களில் பெரிய பயமான மரண பயத்தினையும் நீக்கும் வல்லமை உடையது. அவளுடைய பார்வை எம்மை எல்லாவித உலக, மன, உடல் துன்பங்களில் இருந்து மீட்டு , சம்ஸாரம் எனும் உலக துன்ப கடலில் இருந்து மீட்டு எமது ஆன்மாவை காலமற்ற வெளியில் விடுதலையினை தருகிறது.

தெய்வீக பெண்மையின் ஆயுதங்கள் எப்போதும் எமக்கு அழிவையும் மரணத்தையும் தருவதில்லை, ஒரு கண்டிப்பான ஆசிரியர் எம்மை திருத்துவதற்கு வைத்திருக்கும் பிரம்பினை போன்று எம்மை நல்வழிக்கு இட்டுச்செல்லும் வழிகாட்டி. உண்மையில் தேவி எம்மை ஒவ்வொரு தீமை, அதிஷ்டமின்னை, துன்பம் என்பவற்றில் இருந்து காக்கும் கருணையுடைய ராட்சகி. எமது துன்பங்களுக்கு தனது அன்பினை தந்து முயற்சியுடன் முன்னேற வழிகாட்டுபவள். அத்தகைய தேவியிடம் சரணடைவதால் எமது துன்பங்களை மென்மையாக்கி  இறுதியில் எம்மை உருக்கி ஆனந்தத்தில் சேர்ப்பவள்!


குருஜி அன்னப்பூர்ணா ஸஹித அமிர்தாந்த நாத 

*************************
the core facts of this article was driven from Guruji Sri Amirhtananda's article "Sacred Feminine " and translated to Tamil for the purpose of sharing knowledge and information. 



the original article was presented in the Devipuram web site. 

Wednesday, December 10, 2014

ஸ்ரீ வித்தை

ஸ்ரீ வித்தை

 ஸ்ரீ வித்தை என்றால் அனுகூலமான/புனிதமான அறிவு என்று பொருள். லலிதாம்பிகையுடன் தொடர்புடைய அனைத்துமே புனிதமானதும் அனுகூலமானதே. அவளைப்பற்றிய ஞானம் குருவிடமிருந்து சீடனுக்கு தீட்சை மூலம் வழங்கப்படும். குரு முதலில் சீடனின் தகுதிக்கு தக்கவாறு பஞ்சதசி அல்லது பாலா மந்திர தீட்சை வழங்குவார். பொதுவாக லலிதையின் சிறு குழந்தை வடிவான "பாலாவே" முதல் தீட்சையின் போது வழங்கப்படும். மாணவனின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பஞ்சதசி பின்னர் ஷோடசி மந்திர தீட்சைகள் வழங்கப்படும்லலிதாம்பிகையின் அதியுயர் மந்திரம் "மஹா ஷோடசி" எனப்படும். இந்த மந்திரம் சாதகனுக்கு முக்தியினை வழங்கும்.   குருவிற்கும் சீடனுக்குமான தொடர்பு சீடன் முழுமையாக வளர்ந்து பக்குவம் பெறும் வரை தொடரும். இந்த மந்திரங்கள் தீட்சையின் பின்னர் குறித்த அளவு ஜெபம் செய்து யாக தர்ப்பணாதிகள் செய்து சித்தி பெற்ற பின்னர் சாதகன் தேவியுடன் தொடர்பு  கொள்ளும் ஆற்றலினை பெறுகிறான். இந்த மந்திர ஜெபம் தவிர்ந்து ஸ்ரீ சக்கரத்தினை பூஜை செய்யும் முறையும் குருவினால் கற்றுத்தரப்படும். அதன் பின்னர் சீடன் குறித்தளவு மூல மந்திர ஜெபத்தினை (பஞ்சதசி அல்லது ஷோடசி ) ஸ்ரீ சக்கர பூஜையுடன் தினசரி செய்து வர வேண்டும். அதன் பின்னர் தேவியை  வர வேண்டும். ஸ்ரீ வித்தையில் குரு சிஷ்ய பரம்பரை மிக முக்கியமான ஒன்றாகும்.


Tuesday, December 9, 2014

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம் அவளுடைய இல்லம். ஸ்ரீ சக்கரம் நான்கு மேல் நோக்கிய கோணங்கள், இவை சிவ சக்கரங்கள் எனப்படும், கீழ் நோக்கிய ஐந்து சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் எனப்படும். இந்த ஒன்பது முக்கோணங்களும் இடைவெட்டி மொத்தம் நாற்பத்தி நான்கு முக்கோணங்களை உண்டாக்கும். இது நடுவில் உள்ள  பிந்து சக்கரத்தினையும் சேர்த்த பகுதியினையும் சேர்த்த எண்ணிக்கையாகும். ஒன்பது முக்கோணங்களில் எட்டினை மட்டும் கணக்கெடுத்தால் மிகுதி உள்ள ஒரு முக்கோணம் நிலையானதாக அசைவற்று இருக்கும். நிலைப்பண்பு என்பது சிவத்தினுடைய தன்மை, இயக்கம் என்பது சக்தியினுடைய தன்மை. இந்த சக்கரங்கள் சக்தியின் இயக்கத்தால் லலிதையின் இல்லமாக்கப் பட்டிருகின்றது. ஸ்ரீ சக்கரம் பிரபஞ்ச சக்கரம் எனவும்  கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்திற்கும் குண்டலினி பயணிக்கும் ஒன்பது சக்கரங்களினையும் ஒப்பிட முடியும். (ஆறு சக்கரங்கள் + சஹஸ்ராரம்+குல சஹஸ்ரம்+அகுல சஹஸ்ரம்). ஸ்ரீ சக்கரம் மனித உடலுடனும் ஒப்பிட முடியும். மேல் சக்கரங்கள் நாபிக்கு மேல் உள்ள பகுதிகளையும், கீழ் சக்கரங்கள் நாபிக்கு கீழ் உள்ள பகுதிகளையும் குறிப்பிடும். சக்தி கோணம் தோல், இரத்தம், மூளை, சதை, எலும்புகளையும் சிவ கோணங்கள் ஆன்மா பிராணன், தேஜஸ், விந்தினையும் குறிப்பிடுகிறது. சக்தி கோணம் பருப்பொருட்களையும் சிவ கோணங்கள்  சூஷ்ம [பொருட்களையும் குறிப்பிடுகிறது. இந்த சூஷ்ம ஸ்தூல பொருட்கள் ஒருங்கிணையும் போது உயிர்ப்பு தோன்றுகிறது. ஐந்து சக்திக்கோணங்களும்   ஆகாயம், வளி, அக்னி, நீர், மண் என்ற பஞ்ச பூதங்களை குறிப்பதாகவும், இவற்றின் வேற்றுமை கர்மேந்திரியங்கள் ஐந்தாகவும், ஞான இந்திரியங்க்களாகவும், தன்மாத்திரைகளாகவும்உருப்பெறுவதையும் குறிக்கும். சிவ கோணங்கள் நான்கும் அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றையும் குறிக்கும்

பிந்து என்பது உள்ளே காணப்படும் கீழ் நோக்கிய  உள்ளே காணக்க்படும் புள்ளியாகும். இந்த பிந்துவே உலக தோற்றத்திற் கெல்லாம் காரணமாக கருதப்படுகிறது. இது   சிறிய விதை ஒன்று பெரிய மரத்தினை உண்டாக்குவதை உதாரணமாக கூற முடியும். இந்த பிந்துவைச் சூழ உள்ள பகுதி ஆனந்தத்தினை தருவது, இதனாலேயே சர்வானந்தமயச் சக்கரம் எனப்படுகிறது. இந்த ஆனந்ததிற்கு காரணம் சிவனும் சக்தியும் இந்த சக்கரத்தில் இணைந்து உன்னார்கள் (நாமம் 999). இந்த சக்கரம் பிந்துவாக சஹஸ்ராரத்தில் தியானிக்கப்படுகிறது. இங்கு சிவசக்தி ஐக்கியம் மட்டும் தியானிக்கப்படுவதில்லை, ஒருவருடைய இஷ்ட தேவதை, மற்றும் குருவினையும் சஹஸ்ராரத்தில் தியானிக்க முடியும். ஸ்ரீ சக்கரத்தினை வணங்கும் செயன்முறையினை நவாவரண பூஜை என்பார்கள். நவ என்றால் ஒன்பது, ஆவரணம் என்றால் சுற்றுக்கள் எனப்பொருள் படும். இந்த பிந்துவினை அடைய முதல் பல தேவதைகளை துதிக்க வேண்டும். முதல் ஆவரணத்தில் 28 தேவதைகள், இரண்டாவது ஆவரணத்தில் 16 தேவதைகள், மூன்றாவது ஆவரணத்தில் 08 தேவதைகள், நான்காவது ஆவரணத்தில் 14 தேவதைகள், ஐந்தாவது ஆவரணத்தில் 10 தேவதைகள், ஆறாவது ஆவரணத்தில் 10 தேவதைகள், ஏழாவது ஆவரணத்தில் 08 தேவதைகள், எட்டாவது ஆவரணத்தில் 15 தேவிகளும் 04 ஆயுதங்களும் ( நாமாக்கள் 08 -11 வரை), ஒன்பதாவது நடு  முக்கோணத்தில் ஐந்து ஐந்து தேவதைகள் ஒவ்வொரு பக்கமாக  பதினைந்து திதி நித்தியாக்களும் முக்கோணத்தின் சுற்றில் வணங்கப்படும். லலிதாம்பிகை பிந்து ஸ்தானத்தில் வணக்கப்படும். இந்த தேவதைகள் தவிர்ந்து குரு  பரம்பரையினரும் இந்த முக்கோணத்தின் மேலே  வணங்கப்படுவர். ஸ்ரீ சக்கரமும் மஹா மேருவும் ஒன்றே, மஹா என்றால் பெரிய என்றும்ம் மேரு என்றால் மலை என்றும் பொருள் படும். தேவி மகா மேருவின் உச்சியில் வசிக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாண வடிவமே ஸ்ரீ சக்கரம் எனப்படும். ஸ்ரீ  சக்கரம் என்பது தட்டையான வடிவம், பிந்து புள்ளியாக குறிக்கப்படும், மஹாமேருவில் பிந்து உச்சியில் காணப்படும்.